செவ்வாய், 9 மே, 2017

திருமணமாகப்போகும் தன் மகளுக்கு ஒரு

🌺🌹 திருமணமாகப்போகும் தன் மகளுக்கு ஒரு
தந்தையின் அறிவுரை 🌹🌺
❣❣ வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும்
தானே அறிவுரை கூறுவார்கள், பின் ஏன் புதிதாய்
உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன்
என்று உனக்கு வியப்பாக
இருக்கிறதா? செல்லமே!
❣❣ அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில
விஷயங்களை கூற விரும்புகிறேன், உன்
எதிர்கால மணவாழ்க்கையில்
ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக
இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..
❣❣ 1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின்
திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா…
என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் கிரிடமும் , என் அப்பாதான் ‘பெஸ்ட்’ என்ற
எண்ணமும் உன் மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள்.
வார்த்தைகளில் வெளிப்படுத்தி ‘உன்னவரின்’
மனதில் எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய
அவசியம் இல்லை. உன் கணவரிடம்,
“என் அப்பா நேரம் தவற மாட்டார்”,” என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்” என்று
அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா….
உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி
வரை தூங்கிய சோம்பேரி தான்.
❣❣ 2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல்,
உன் கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே.
என் வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன்
மீதான கண்மூடித்தனமான பாசமும் என்
கோபங்களை மறைத்திருக்கலாம்.
அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம்
கொடு.
முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி,
அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.
❣❣ 3.சிறு சிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடு
உங்கள் இருவருக்குள்ளும் வர தான் செய்யும். அச்சமயங்களில் எல்லாம், “நான் என் அப்பா
வீட்டிற்கு போகிறேன் “,”எனக்கு என் அப்பா
இருக்கிறார் ” என்ற வசனங்களை பேசி உன்
மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே...
முடிவுகள் எடுக்கும்போது வழமை போல
அப்பாவிடம் கேட்டுசொல்றன் என்று வாய்தவறிக்கூட கூறிவிடாதே... இனிமேல் நீங்கள் இருவரும்தான் எதிலும் முடிவு எடுக்கனும்...
உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை
அவருக்கு புரிய வை. நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம் போட்டு உட்கார
வைக்கும்.
ஆண்களின் கோபம் கூட ஒரு விதத்தில்
அன்புதான்... அதனால் நீயும் திருப்பி
கோபப்படாதே....
உன் அம்மாவின் சகிப்புத்தன்மை தான் என்னை
பல இடங்களில் மனிதனாக மாற்றியது...
அதேபோல் நீயும் சகிப்புத்தன்மையை வளர்க்கவேண்டும்.
சுருக்கமாக கூற வேண்டுமானால்….
*அப்பா புராணம் பாடாதே.
*அப்பாவோடு ஒப்பிடாதே .
*அப்பா செல்லம் ‘ என்ற பட்டம் பயன் தராது .
*அப்பாக்கு கொடுத்த கிரிடத்தை அவருக்கும் கொடு.
22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனி மேல் உன் கணவரின்
கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும்
நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்
காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.
நீடுடி வாழ வாழ்த்துகள்❣❣. . .💐💐💐
✫✫ JJ ✫✫
(⁀‵⁀) ✫ ✫ ✫.
`⋎´✫¸.•°”˜˜”°•✫
..✫¸.•°”˜˜”°•.✫
☻/ღ˚ •。 ★★★
/▌*˛˚ღ •˚ ★✰✰ ☆ தெவிட்டாத துளிகள் ★ ✰✰★
/ \˚** ★★★

விழிப்புணர்வு செய்தி

🌍 விழிப்புணர்வு செய்தி
♈சார்ஜ் போட்டபடி பேசியதால்,போன்  வெடித்து சிறுவனின் கண்கள் பாதிக்கப்பட்டன.
♈சார்ஜ் போட்டபடி பேசியதால், போன்  வெடித்து இளைஞர் உயிரிழப்பு
♈இரவில் சார்ஜ் போட்ட போன் வெடித்து குடிசை தீப்பிடித்து இருவர் பலி
♈இது போல் நாம் அடிக்கடி பல செய்திகளை பார்த்திருப்போம்.
♈ஆனால் நாம் முறையாக செல்போன் பற்றிய தகவல்கள்  தெரியாதால் தான் இது போல் சம்பவங்கள் தற்போது அடிக்கடி
நடக்கின்றன.
♈சமீப காலங்களாக மொபைல் போன் வெடித்து சிதறுவது வாடிக்கையாக அரங்கேறி வருகின்றது.
♈உலகம் முழுவதும் பலரது மொபைல் போன்கள் அடிக்கடி வெடிக்கின்றது,
♈சில இடங்களில் போன் வெடித்து பலருக்கும்  அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன.
♈மொபைல் போன்கள் வெடிக்காமல் இருக்க நாம்  என்ன செய்ய வேண்டும்
⛔மொபைல் போன் வெடித்து சிதறாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் :
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
1⃣எப்பொழுதும் ஒரிஜினல் பேட்டரிக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2⃣மொபைல் போன் சார்ஜரும் ஒரிஜினலாக தான் இருக்க வேண்டும்,
3⃣போலி  சார்ஜர்கள் போனிற்கு அதிகளவில் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும் இதனால் சில நேரங்களில் போன் வெடிக்கும்.
4⃣மொபைல் போன், பேட்டரி மற்றும் சார்ஜர் என அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
5⃣போன் சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்ள கூடாது.
6⃣ போன் ஈரமாக இருக்கும் போது உடனடியாக சார்ஜ் செய்ய கூடாது
7⃣பேட்டரி சேதமடைந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும்.
8⃣போன் பேட்டரி சார்ஜ் செய்து முடித்த பின் உடனடியாக போனினை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும்.
9⃣பேட்டரி அதிகளவு சூடாக அனுமதிக்காதீர்கள்
🔟சார்ஜ் போட்டப்படி கேம் விளையாடுவது, படம் பார்ப்பது போன்றவைகள் செய்யாதீர்கள்.
1⃣1⃣ஈரக்கையுடன் மொபைல் போன் உபயோகிக்காதீர்கள்
1⃣2⃣கழிவறை மற்றும் குளியல் அறைகளில் மொபைல் போன் பயன்படுத்தாதீர்கள்.
1⃣3⃣மொபைல் போன் சார்ஜ்ஜில் இருக்கும் போது தலையணை க்கு கீழே வைக்க கூடாது ஏனெனில் சூடு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
1⃣4⃣மழைகாலத்தில் வெளியே செல்லும் போது
செல்போன் ஈரம் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.
1⃣5⃣சார்ஜ் போட்டு கேம் விளையாட யாரும் முயற்சிக்க கூடாது அப்படி செய்தால் விபரீதம் ஏற்படும் என்று நமக்கு தெரிந்தும் தொடர்ந்து  பலர் இதுபோன்ற தவறுகளை செய்வதால் விபத்து ஏற்படுகிறது.
1⃣6⃣ சிறுவர்களை முடிந்தவரை சார்ஜ் ஏறும்போது போனை எடுக்க அனுமதிக்க  வேண்டாம் என நாம் சொல்லி வைக்கவேண்டும்.
1⃣7⃣  செல்போன் ஈரம் ஆகிவிட்டால் உடனடியாக கடையில் கொடுத்து சரி செய்து விடுங்கள்.
👆🏼மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்றுங்கள்.
📱அதிகமாக போன்கள் வெடித்து சிதற காரணமாக இருப்பது நீங்கள் விலைகம்மியாக இருக்கு என்று வாங்கும் போலியான தரமற்ற சாதனங்கள் தான்,
📲எனவே விலைகுறைவாக
உள்ளதே என்று கண்ட பொருட்களை வாங்கி உங்கள் உயிரோடும் உங்கள் குடும்பத்தினரின் உயிரோடும் விலையாடாதீர்கள் விலை குறைவான போலியான பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

எச்சரிக்கப் படுகிறது.

ஒரு பெண்  தன் சமையல்
அறையில் கியாஸ் (Gas stove ) அடுப்பில்
சமையல் செய்து கொண்டு
இருக்கும் போது பக்கத்தில்
பாத்திரம் கழுவும் இடத்தில் சில
கரப்பான் பூச்சிகளைக் கண்டாள்.
.உடனே அவள் பூச்சிக் கொல்லி ("Hit",
"Mortein" )மருந்தை அடித்து தெளித்தாள்.அந்த
மருந்தின் வேகத்தால் கியாஸ் சிலிண்டர்
வெடித்து அவள் மேல் 65% தீக்காயம்
ஏற்பட்டது.
அவளைக் காப்பாற்ற முயன்ற கணவர்
மீதும் தீக்காயம் ஏற்பட்டது.இருவரும்
மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
கணவர் தொடர்ந்து சிகிச்சை
பெற்று வருகிறார். ஆனால் அந்த
பெண்  சிகிச்சை
பலனின்றி பரிதாபமாக இறந்து போனாள்.அவள்
இறந்தது கூட கணவனுக்கு
தெரியாது.
அதனால் எரிவாயு எரிந்து
கொண்டு இருக்கும் போது
பூச்சிக் கொல்லி மருந்துகளை
தெளிக்க வேண்டாம் என்று
எச்சரிக்கப் படுகிறது.

அது ஒரு பழ மரம்

அது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான் .அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.
அதற்கு அவன் சொன்னான். என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை என்றான்.
மரம் சொன்னது கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்று சொன்னது... அவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான்.
மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது.
அதற்கு அவன் சொன்னான், இல்லை எனக்கு இப்பொது வயதாகி விட்டது, எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை என்றான்.  மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல் அதில் ஒரு வீடு கட்டிக்கொள் என்றது.
அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்போது மரம் அவனிடம் இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து என்னை பார்த்து செல் என்றது. அவனும் வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. அதற்கு பின் பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.
மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. அவன் சொன்னான் என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான்.
மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது. அவன் அடி மரத்தை வெட்டும் போது மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது.
ஆனால் பல வருடங்கள் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான். அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.
இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை கிளைகள் இல்லை அடி மரமும் இல்லை உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என வருந்தியது.
அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்.
அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.
இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான். அதை கூடவா நம்மால் தர முடியாது??????????.    -----  படித்ததில் பிடித்தது -

imo உபயோகிப்போர் கவனத்திற்கு.......


தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சில தீய செயல்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன....
அந்த வரிசையில் உள்ள ஒன்று தான் imo இதன் மூலம் நாம் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்ய முடியும்....
இதில் என்ன ஆபத்து உள்ளது என்றால் நாம் நம்முடைய சொந்த உறவினர்களுடன் பேசுவதற்கே இது போன்ற அப்ளிகேசன்களை பயன்படுத்துகின்றோம் ஆனால் நம்முடைய நம்பர் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கும் நாம் imo வில் உள்ளோம் என்பதை தெளிவாக காட்டிவிடும்...
உதாரணமாக நாம் சவாரிக்கு உபயோகிக்கும் ஆட்டோ டிரைவர்களின் நம்பர்களை நம் குடும்ப பெண்கள் மொபைல் ஃபோனில் save செய்து வைத்திருந்தால் நம்முடைய தகவல்கள் அனைத்தும் எதிர் தரப்பில் உள்ள நபருக்கு தெரியும் அதாவது நாம் imo உபயோகிக்கின்றோம் என்பதை தெளிவாக அவர்களுக்கு காட்டிவிடும் இதன் மூலம் சில தவறான நபர்கள் இதை தவறான முறைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் .....
எப்படி என்றால் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் கையில் மொபைல் ஃபோன்களை கொடுப்பது என்பது இப்போது சர்வ சாதாரணமாக உள்ளது.....
குழந்தைகள் தெரியாமல் imo open செய்து அதில் உள்ள ஃபோன் சிம்பலை தவறுதலாக இலேசாக கையை வைத்தாலே போதும் உடனே கால் சென்றுவிடும் இது எதிர்தரப்பில் உள்ளவருக்கு தெரியாது குழந்தை தான் தவறாக கால் செய்துவிட்டது என்று மீண்டும் அதே நம்பருக்கு இந்த நபர் கால் செய்ய முயற்ச்சிக்க பிரச்சனை இங்கு தான் தொடங்குகின்றது ....
எனவே உங்கள்வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் ஃபோன்களில் தேவையற்ற நம்பர்களை save செய்ய வேண்டாம் என வழியுறுத்துங்கள்....
சவாரிக்கு எடுக்கும் ஆட்டோ,கார் டிரைவர்களின் நம்பர்களை வீட்டில் உள்ள ஆண்களின் மொபைல் ஃபோனில் மட்டும் save செய்து கொள்ளுங்கள்.....
சைத்தான் எவர் மூலமாகவும் வழிகெடுப்பான் எனவே பெண்கள் தங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத நம்பர்களை உடனே அழித்துவிடுங்கள்......
இன்னொரு விஷயம் imo வில் invite friends என்ற ஒரு option உள்ளது இதன் மூலம் imo வில் இல்லாத சில நபர்களை நாம் மெசேஜ் மூலம் imo விற்கு அழைப்பதே இதன் பொருள் விவரம் தெரியாத சிலர் இதனை தவறுதலாக உபயோகிக்கின்றனர் invite friends சென்று select all கொடுத்தால் போதும் நமது மொபைலில் உள்ள அனைத்து நம்பருக்கும் அதாவது அவர் Nokia 1100 உபயோகித்தாலும் சரி அவருக்கும் நம்முடைய invite msg சென்று விடும் இதற்கு imo ஒன்றும் Free option ஒன்றும் கொடுக்கவில்லை நாம் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்க்கும் நமது இருப்பு தொகையிலிருந்தே
(BALANCE)இருந்தே பணம் வசூலிக்கப்படும்
விவரம் தெரியாத சிலர் இதனை தவறாக உபயோகித்து தனது மொபைலில் உள்ள அனைத்து பேலன்சையும் இழப்பதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம் எனவே இந்த விஷயத்தை ஆண் பெண் இருபாலரும் கவனமாக கையாள வேண்டும் என்பதே நமது கோரிக்கை...
அன்புடன்....
ஹாபிழ், முஹம்மத் ரபீக், மிஸ்பாஹி.

ஏப்ரல் ஃபூல்

❌❌ஏப்ரல் ஃபூல்❌❌
ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல்,
 உரிய கவுரவத்தைக் கொடுக்காமல்,
 அவர்களிடம் பொய் சொல்லி,
அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது,
 ஏளனமாகச் சிரிப்பது,
 மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.
 இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் - முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவிப்பதை பார்க்கிறோம்.
எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.
அபூபக்ரா (ரலி) கூறியதாவது: "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். "ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்'' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்'' என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)'' என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள்.
(நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)
இன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள். இதற்குப் பெயர் ஏமாற்றுதல், மோசடி ஆகும். உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல.
(நூல்கள்: முஸ்லிம் 147, திர்மிதீ 1236)
"மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி' என்று கூறப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி 6178)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளக் கொடி உண்டு. அது மறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும்.
(நூல்: முஸ்லிம் 3271)
ஆகவே ஏப்ரல் 1 முட்டாள் தினம் என்பது இஸ்லாத்தில் கிடையாது!!
அதிகம் பகிரவும்

புதன், 3 மே, 2017

தங்கத்திற்குரிய ஜகாத்

தங்கத்திற்குரிய ஜகாத்
எண்பத்தியேழரை கிராம்
தங்கத்திற்கு – 2 கிராம் 187.5
மி.கி.
11 பவுனுக்கு 2 கிராம் 250
மி.கிராம்
12 பவுனுக்கு 2 கிராம் 400 மி.
கிராம்
13 பவுனுக்கு 2 கிராம் 600 மி.
கிராம்
14 பவுனுக்கு 2 கிராம் 800 மி.
கிராம்
15 பவுனுக்கு 3 கிராம்
16 பவுனுக்கு 3 கிராம் 200 மி.
கிராம்
17 பவுனுக்கு 3 கிராம் 400 மி.
கிராம்
18 பவுனுக்கு 3 கிராம் 600 மி.
கிராம்
19 பவுனுக்கு 3 கிராம் 800 மி.
கிராம்
20 பவுனுக்கு 4 கிராம்
25 பவுனுக்கு 5 கிராம்
30 பவுனுக்கு 6 கிராம்
35 பவுனுக்கு 7 கிராம்
40 பவுனுக்கு 1 பவுன்
50 பவுனுக்கு ஒன்னேகால்
பவுன்
60 பவுனுக்கு ஒன்றரை பவுன்
70 பவுனுக்கு ஒன்னே
முக்கால் பவுன்
80 பவுனுக்கு இரண்டு பவுன்
90 பவுனுக்கு இரண்டேகால்
பவுன்
100 பவுனுக்கு இரண்டரை பவுன்

📔ஜகாத் விபரம்📔
🔹Rupees. 👉Rs.          Ps.
🔹100.        👉 2.           50
🔹200         👉5.            00
🔹300         👉7.            50
🔹400.        👉 10.         00
🔹500.        👉12.          50
🔹600.        👉15.          00
🔹700.        👉17.          50
🔹800.        👉20.          00
🔹900.        👉22.          50
🔹1000.      👉25.          00ந்
🔹1500.      👉37.          50
🔹2000.      👉50.          00
🔹2500.      👉62.          50
🔹3000.      👉75.          00
🔹3500.      👉87.          50
🔹4000.      👉100.        00
🔹4500.      👉112.        50
🔹5000.      👉125.        00
🔹5500.      👉137.        50
🔹6000.      👉150.        00
🔹6500.      👉162.       50
🔹7000.    👉175.        00
🔹7500.       👉187.       50
🔹8000.       👉200.       00
🔹8500.       👉212.       50
🔹9000.       👉225.       00
🔹9500.       👉237.       50
🔹10000.     👉250.      00
🔹15000.     👉375.      00
🔹20000.     👉500.      00
🔹25000.     👉625.      00
🔹30000.     👉750.      00
🔹35000.     👉875.      00
🔹40000.     👉1000.    00
🔹45000.     👉1125.    00
🔹50000.     👉1250.    00
🔹55000.     👉1375.    00
🔹60000.     👉1500.    00
🔹65000.     👉1625.    00
🔹70000.     👉1750.    00
🔹80000.     👉2000.    00
🔹90000.     👉2250.    00
🔹1 lakh.      👉2500.    00
🔹2 lakh.      👉5000.    00
🔹3 lakh.      👉7500.    00
🔹4 lakh.      👉10000.  00
🔹5 lakh.      👉12500.  00
🔹6 lakh.      👉15000.  00
🔹7 lakh.      👉17500.  00
🔹8 lakh.      👉20000.  00
🔹9 lakh.      👉22500.  00
?
?10 lakh.    👉25000. 00
🔹20 lakh.    👉50000. 00
🔹30 lakh.    👉75000. 00
🔹40 lakh.    👉1 lakh.
🔹50 lakh.    👉1 lakh 25000
🔹1 crow.     👉2 lakh 50000
🔹2 crow.     👉5 lakh.

بداية المجتهد ونهاية المقتصد

போலி தவ்ஹீத் ஜமாஅத்தே .....!!


இதை படி 👇👇
நமது முன்னோடிகள் யார்?
நல்லோர்களான இமாம்களா?
நவீன ஏகத்துவ ஏஜெண்ட்களா?
இமாம்களின் வழி நடப்போம்!
இறைவனின் பொருத்தத்தை அடைவோம்!
இஸ்லாம் மட்டுமே நேர்வழி என்ற நிலைமாறி,
இஸ்லாமில் எது நேர்வழி என்ற குழப்பமான கால சூழ்னிலையில் நாம் வாழ்கிறோம்.
குர்ஆன், ஹதீஸிலிருந்து மார்க்கச் சட்டங்களை வாழ்வில் நடைமுறைப்படுத்த நாம் யாருடைய விளக்கங்களைப் பின்பற்றுவது.
இன்றைய நவீன அறிஞர்களையா?
அல்லது அல்லாஹ்வுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்த இமாம்கள் மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்களையா?
இதோ உங்கள் சிந்தனைக்கு........
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்திற்கு ஏறத்தாள 90 ஆண்டுகளுக்கு பிறகு மத்ஹப்கள் தோன்றியது.
மத்ஹப்கள் உருவாகியதன் முக்கிய நோக்கம் குழப்பம் இல்லாமல் சிறந்த வழியில் மக்கள் அமல்களை செய்யவும், மார்க்கச் சடங்களை  நிறைவேற்றவும் வேண்டும் என்பதேயாகும்.
மத்ஹபில் 4 வழிமுறைகள் உள்ளது. அந்த நான்கு வழிமுறைகளும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டிதந்ததே..
அதில் பிரிவுகள் இல்லை. மனநோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மத்ஹப்கள் பிரிவாகத் தெரியும்.
1. ஹனபி மத்ஹப் =
அபு ஹனிபா நுஃமான் இப்னு ஸாபித் (ரஹ்).
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி  80  - 150.
2. மாலிகி மத்ஹப் =
மாலிக் இப்ன் அத்ப்த்ிய்ரஹ்).
 வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி 93 - 179.
3. ஷாபி மத்ஹப் =
அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்ன் இத்ரிஸ் அஷ்-ஷாபி .
வாழ்ந்த காலம்:  ஹிஜ்ரி 150 - 204.
4. ஹன்பலி மத்ஹப் =
அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு ஹன்பல் (ரஹ்).
வாழ்ந்த காலம்:  164 - 241.
மார்க்கச் சட்டங்களைத் தொகுத்த மத்ஹப் இமாம்களின்  காலங்களும் கிட்டத்தட்ட ஒரே காலம்தான் .
 மத்ஹப்பில் பிரிவினை இருந்தது என்று வைத்துக்கொண்டால்  நான்கு இமாம்களிடமும் "நீ பெரியவனா? அல்லது நான் பெரியவனா?" என்ற தர்க்கம் ஏற்ப்பட்டு அன்றைக்கே நான்கு நாற்பதாக மாறியிருக்கும்!
ஆனால் மத்ஹப் தோன்றி 1300 வருடங்கள் ஆகியும் அதே 4 வழிகள்தான் இன்று வரைக்கும் இருக்கிறது.
புதிதாக ஒன்று கூட தோன்றவில்லை.  மத்ஹப்பில் பிரிவினை இல்லை என்பதற்கு இதுவே தக்க சான்று.
நான்கு இமாம்களையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.
(ஆனால் இன்றோ மத்ஹப்பில் பிரிவினை என்று வந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் வேர் வேறாக பிரித்து அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் சூழலை உருவாக்கி மக்களுக்கு அந்த கூட்டத்தை பிரித்து காட்டியுள்ளான்.
 வெறும் முப்பது வருடங்களுக்குள்.)
ஹதீஸும், ஹதீஸ் கலை வல்லுநர்களும்!
ஆதாரப்பூர்வமான ஆறு மிகப்பெரிய ஹதீஸ்  நூல்களைத் தொகுத்த ஆறு இமாம்களும் மத்ஹப்பை பின்பற்றியவர்களே!!
அந்த ஆறு இமாம்களும் ஹதீதுகளை தொகுப்பதற்கு முன் தங்களுக்கென ஓர் வரைவிலக்கணம் வகுத்து அதன் படியே தங்கள் நூல்களில் ஹதீஸ்களைப் பதிய தொடங்கினார்கள்!
1. ஸஹீஹ் அல் புகாரி =
அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி .
வாழ்ந்த காலம்:  194 - 256.
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் =  7275.
2.  ஸஹீஹ் முஸ்லிம் =
அபு அல் ஹசன் அஸ்கர் அத்தீன் முஸ்லிம் அன் நய்சாபூரி.
வாழ்ந்த காலம்:  204-261
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் =  2200.
3. அபு தாவூத் =
அபு தாவூத் சுலைமான் இப்னு அல் அசாத் (ரஹ்).
 வாழ்ந்த காலம்:  202 - 275.
 பின்பற்றிய மத்ஹப் =  ஹன்பலி
தொகுத்த ஹதீத்கள் = 4800.
4.  திர்மிதீ=
அபு ஈஸா இப்னு ஈஸா திர்மிதீ (ரஹ்).
வாழ்ந்த காலம்:  209-279.
பின்பற்றிய மத்ஹப் = ஷாஃபி
தொகுத்த ஹதீத்கள் = 3956.
5.  நஸாயீ =
அஹ்மத் இப்னு சுஹைப் இப்னுஅலி அந்-நஸாயீ (ரஹ்).
வாழ்ந்த காலம்:  215 - 300.
பின்பற்றிய மத்ஹப் = ஹன்பலி.
தொகுத்த ஹதீத்கள் = 5270
6. இப்னு மாஜா = அபு அப்தில்லாஹ் முஹம்மது இப்னு யாஜித் இப்னு மாஜா (ரஹ்).
வாழ்ந்த காலம்:  209 - 273.
பின்பற்றிய மத்ஹப் =  ஷாஃபி.
தொகுத்த ஹதீத்கள் = 4000.

மத்ஹப்கள் அனைத்தும் குப்பை, இமாம்களைப் பின்பற்றக்கூடாது, இமாம்களின் கருத்துகளை ஏற்கக்கூடாது ,
குர்ஆன் மற்றும் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று கூறும் கூட்டத்தார்க்கு பகிரங்க அறைகூவல்.!
ஹதீஸ்களை தொகுப்பதற்கு முன் அனைத்து இமாம்களும் அவர்களுக்கு என்று ஓர் வரைவிலக்கணத்தை (இமாம்களின் சொந்த கூற்று) வடிவமைத்துக்கொண்டு அதன் படியே ஹதீஸ்களைத் தொகுத்தார்கள்.
ஆகையால் இமாம்களின் கூற்றினை ஏற்கக்கூடாது என சொல்பவர்கள் முதலில் அவர்கள் வகுத்த வரைவிலக்கணத்தை தூக்கியெறிய வேண்டும்!
பின்பு மத்ஹப்வாதிகள் வழிகேடர்கள், காஃபிர்கள்.
அவர்களின் தொகுப்பினை ஏற்கக்கூடாது எனில்,
 ஹதீஸ்களைத் தொகுத்த அனைத்து இமாம்களும் நான்கு மத்ஹப்களில் ஒன்றைப் பின்பற்றியே வாழ்ந்துள்ளார்கள்.
ஆகையால் அவர்கள் தொகுத்த  அனைத்து ஹதீத்களையும் கட்டுக்கதைகள் என புறம் தள்ள  வேண்டும்!!
செய்வார்களா ???
எதற்கெடுத்தாலும் புகாரியில் இருக்கிறதா?
முஸ்லிமில் இருக்கிறதா?
(ஸிஹாஹ் சித்தா) ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் கிதாபுகளில் இருக்கிறதா? என்று கேள்வி கேட்கும் நவீன ஏகத்துவவாதிகளே!
மத்ஹப்களை வழிகேடுகள் என்றும் குப்பைகள் என்றும் நாவு கூசாமல் அநாகரீகமாக விமர்சிக்கும்
ஏகத்துவத்தின் ஏகபோக உரிமையாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் கணவான்களே!
இமாம் புஹாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸாயீ போன்ற இந்த சமுதாயத்திற்கு ஹதீஸைத் தொகுத்தளித்த அத்தனை மிகப் பெரிய இமாம்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மத்ஹப் இமாம்கள் வகுத்துத் தந்த மார்க்கச் சட்டங்களின் அடிப்படையிலேயே வாழ்ந்து மறைந்தவர்கள்.
மத்ஹபை பின்பற்றுவோரை வழிகேடர்கள், காஃபிர்கள் என்று முத்திரை குத்தும் நீங்கள்
தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து,
இந்த சமுதாயத்திற்கு ஹதீஸ்களை வழங்கிய மத்ஹப்களை பின்பற்றி வாழ்ந்த மரியாதைக்குரிய ஹதீஸ்களை வல்லுநர்களையும் நிராகரிப்பில் தள்ளுகிறீர்களா?
சகோதரர்களே!
நல்லடியார்களாக வாழ்ந்து மறைந்த நம் இமாம்களின் விளக்கங்களை ஏற்று அவ்வழியில் ஒற்றுமையான சமூகமாக, பலம் மிக்க உம்மத்தாக பயணிப்போமா?
அல்லது பிரிவினையை வளர்க்கும் நவீன ஏகத்துவ ஏஜண்ட்களைப் பின்பற்றி சிதறுண்டு கிடப்போமா?
சிந்தியுங்கள்!
செயல்படுங்கள்!

மரண சாசனம்.


செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம்.
சிறுகதை!
ஒரு ஊரில்
ஒரு செல்வந்தர்
இருந்தார்
அவர்
நல்ல
அறிஞரும்
கூட,
தனக்கு மரணம்
நெருங்குவதாக
உணர்ந்தார்.
தன்
மகனை அருகாமையில்
அழைத்தார்.
மரண
சாசனம் போல ஒன்றைச் சொன்னார் : என்
அருமை மகனே, விரைவில் நான் உங்கள்
அனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன்.
என்னுடலைக்
குளிப்பாட்டி சடலத்துணி சுற்றுவீர்கள்.அப்போது என்னுடைய
ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?”
என்று கேட்டார்.
என்னவென்று சொல்லுங்கள் தந்தையே என்றான்
மகன். அறிஞர் கூறினார் : என் சடலம் அதற்குரிய
துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய
பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில்
அணிவித்துவிடு. இதுதான் என் எளிய
கோரிக்கை” என்றார். ஊரில் மிகப் பெரும்
செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன
இது விசித்திரமான
கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும்,
எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக்
கொண்டான்.
அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன்
சொத்துகளையும், மனைவி மக்களையும்
விட்டுவிட்டு மௌத்தாகி போனார்.
அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப
உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர். உடல்
குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில்
சுற்றப்படும் நேரம் நெருங்கியது.
அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள்
நினைவுக்கு வந்தது.
மெல்ல எழுந்து, குளிப்பாட்டியவரிடம்
சென்று தந்தையின் ஒரு காலுறையைக்
கொடுத்து “இதனை என் தந்தையின் கால்களில்
அணிவியுங்கள்; இதுவே அவரின்
இறுதி விருப்பமாகும் என்று கூறினான்.
முடியாது,
முடியவே முடியாது என்று மறுத்தார்
குளிப்பாட்டும் பணியாளர். இல்லை, இது என்
தந்தையின் ஆசை, நீங்கள் செய்துதான்
ஆகவேண்டும் என்று சொல்லிப் பார்த்தான். ஆனால்
அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை.
இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை,
எனவே வாய்ப்பில்லை என்றார் உறுதியாக…
மகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான்.
அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். நான்
சொன்னது, சொன்னது தான். வேண்டுமானால், நீ
மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக்
கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான்
அவர்களும் சொல்வார்கள் என்றார்.
அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில்
அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக்
கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள்.
ஆமாம்! ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்!
இக்களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த
சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த
மகனை நெருங்கினார். தம்பி, உன் தகப்பனார்
அவரது சடலம் துணியிடும் வேளையில்
உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற
நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம்
தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம்
இதுவென்று நினைக்கிறேன்
என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம்
கொடுத்தார்.
இறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர்.
தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப்
படித்தான் மகன். அதில்
பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. என் மகனே…
அனைத்து செல்வங்களையும்
விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என்
நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய
சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய
காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன்
கொண்டு செல்ல முடியவில்லை; நாளை இந்த
நிலை உனக்கும் வரலாம்.
இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும்
இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை,
இந்தப் பொருட்களை நீ நேர்வழியில் ஈட்டி,
நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற
அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த
அருள்வளம் தான் மறு உலகிலும் உதவும்.
ஆகவே, இந்தச் செல்வங்களையும்,
சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின்
வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும்
உணவாகும் வகையில் செலவிடு.
அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம்
பெற்றவனாக ஆவாய்!” என்று எழுதியிருந்தது.
கடிதத்தை படித்த அந்த நிமிடம் உள்ளத்தில்
பெருகியிருந்த ஆணவம், மமதை சடசடவென
எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வு.
கண்களில் நீர் கோர்க்க, தந்தையின்
சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான்
மகன்.்

இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது

                        யா அல்லாஹ்!
நபி மூஸாவை காக்க கடலை பிளந்தவனே!
தொட்டிலில் குழந்தையாக இருந்த ஈஸா நபியை பேச வைத்தவனே!
மீனின் வயிற்றில் இருந்த யூனுஸ் நபியை உன் சக்தியால் காப்பற்றியவனே!
கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அய்யூப் நபியை உன் கருணையினால் குணப்படுத்தியவனே!
என் இரட்சகனே!
மகத்தான உன்னுடைய பெயரால் கேட்கிறேன்!
துக்கம், கவலை, நெருக்கடி, வியாதி, இவை அனைத்தையும் விட்டு என்னை காப்பாற்றுவாயாக!
நான் துக்கத்தில் ஆழ்ந்தால் என்னை மகிழ்ச்சியுடையவனாக ஆக்குவாயாக!
எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உன்னை அல்லாமல் மற்றவரிடம் என்னை தள்ளி விடாதே!
நிச்சயமாக நீ என்னால் தாங்க முடியாத கஷ்டத்தை கொடுக்க மாட்டாய்!
என்னை படைத்தவனே!
என் வாழ்கையை உனது கரத்தில் வைத்திருப்பவனே!
என்னுடைய நற்பாக்கியமும், துர்பாக்கியமும் உன் கையிலே இருக்கின்றன!
 ஏக இறைவா! என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சி உடையதாக ஆக்குவாயாக!
இவ்வுலகமே எனக்கு ஒன்று சேர்ந்து நன்மை செய்ய நாடினாலும் எனக்கென்று நீ எழுதி வைத்ததை தவிர எந்த நன்மையையும் எனக்கு கிடைக்காது என்று  நான் ஈமான் கொண்டுள்ளேன்
உலகமெல்லாம் ஓன்று சேர்ந்து எனக்கு துன்பம் இழைக்க முயற்சித்தாலும் எனக்கு எதிராக நீ எழுதிய துன்பம் மட்டுமே என்னை அடையும் என்பதை நான் நம்புகிறேன்!
ஏக இறைவா! என் உள்ளத்தில்நிறைய தேவைகள் இருக்கின்றன!
உன்னையல்லால் வேறு  யாரிடமும் அதை சொல்ல முடியாது. என்னுடைய ரகசியங்களும் என் ஆழ் மனதில் புதைந்து உள்ளவை களையும் நீ மட்டுமே அறிவாய்!
“குன்” ஆகுக என்று சொன்னால் அனைத்தும் ஆகிவிடும் என்று சொன்னவனே!
என்னுடைய விருப்பங்களை நோக்கி (குன்) “ஆகிவிடு” என்று சொல்வாயாக!
நீ என்னுடன் இருப்பதால் எனக்கு யாரிடமும் எந்த தேவையும் இல்லை.
 எனக்கு நீ வழி காட்டு. என்னுடைய காரியங்களை நீ திட்டமிட்டு நிறைவேற்று.
நான் தவறான வழியில் செல்லும் போது என்னை நேரான வழியில் திருப்பிவிடு.
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கு கட்டுப்பட்டவனாக வாழ்ந்து மரணிக்கின்ற பொழுதும் உனக்கு கட்டுப்பட்டவனாக மரணிக்கின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக!
யா அல்லாஹ் . . . . .
எங்கள் பாவங்களை மன்னித்து
விடு
யா அல்லாஹ் . . . .
நாங்கள் செய்த தவறுகளை
மன்னித்து விடு
யா அல்லாஹ் . . .
கப்ருடைய வேதனையிலிருந்து
நரக நெருப்பிலிருந்தும்
எங்களை பாதுகாப்பாயாக
யா அல்லாஹ்
இம்மையிலும்
மறுமையிலும்
வெற்றியை
தருவாயாக..........
ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார்.அதற்கு அல்லாஹு தஆலா ; மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான்   முஹம்மத் (ஸல்) இன்  கூட்டத்தினரை அனுப்புவேன்.அவர்கள் காய்ந்த உதடுகளுடனும்; வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு; வயிற்றில் பசியுடன் -என்னை அழைப்பர்(துஆ மூலம்).அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள். மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன. ..ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது.மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது .அதற்கான பொருப்பை நானே ஏற்கிறேன்.என்றான்..

தொழுகையானது, மனிதப் பேச்சுகளுக் குரிய நேரமல்ல; இடமல்ல

ஒருநாள் நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் தொழுது கொண்டி ருந்தேன். அப்போது தொழுகையாளிகளில் ஒருவர் தும்மினார். உடனே நான் 'யர்ஹமுக் கல்லாஹ்' (இறைவன் உங்களுக்கு அருள்புரி வானாக!) என்று மறுமொழி கூறினேன்.
 உடனே தொழுகையில் இருந்தோர் என்னை முறைத்துப் பார்த்தனர். 'நீங்கள் ஏன், என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்' என்று கேட்டேன். அவர்கள் பதிலேதும் கூறாமல் தங்கள் கைகளால் தொடைகளில் தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச்சொல்கிறார்கள் என்று உணர்ந்து அமைதியாகி விட்டேன்.
என் தாயும் தந்தையும் நபியவர்களுக்கு அர்ப்பணம்! 'அவர்களுக்கு முன்னரோ பின்னரோ, அவர்களைவிட மிக இனியமுறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை, நான் என் வாழ்நாளில் கண்டதேயில்லை.' இறைவன் மீதாணை யாக! தொழுகையில் நான் அவ்வாறு நடந்து கொண்டதற்காக, அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை.
மாறாக, நபியவர்கள் தொழுது முடித்ததும், 'தோழரே! தொழுகையானது, மனிதப் பேச்சுகளுக் குரிய நேரமல்ல; இடமல்ல. மாறாக, இறைவனைத் துதிப்பதும் அவனைப் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதும்தான்' என்று சொன்னார்கள்.
'இறைத்தூதர் அவர்களே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். இறைவன் இஸ்லாத்தைத் தழுவும்பேற்றை தற்போதுதான் அருளினான். எனவேதான் எனக்கது தெரியவில்லை' என்று கூறிவிட்டு,
🌸 'எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்
 களே' என்றேன். அதற்கு நபியவர்கள் 'சோதிடர் களிடம் நீங்கள் செல்லாதீர்கள்' என்றார்கள்.
🌸 'எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறிபார்க்கின்றனரே' என்றேன். அதற்கு அவர்கள், 'இது, மக்களின் உள்ளங்களில் உள்ள (மூடத்தன மான) ஐதீகம். இது உங்களை செயல்படுவதி லிருந்து தடுத்திட வேண்டாம்' என்றார்கள்.
🌸 'எங்களில் இன்னும் சிலர் நற்குறி அறிய மணலில் கோடு வரையும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்கின்றனரே' என்றேன். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்து வந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது சாத்தியம்தான்' என்றார்கள்.
🌸 'என்னிடம் ஓர் அடிமைப்பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டி ருந்தபோது, ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடு களில் ஒன்றைக் கவ்விச் சென்றுவிட்டது. சராசரி மனிதன் கோபப்படுவதைப் போல நானும் கோபப்பட்டு அவளை அறைந்துவிட்டேன்'.
நான் நபியவர்களிடம் சென்றபோது, அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்
 கள். 'இறைத்தூதர் அவர்களே! அவளை நான் விடுதலை செய்துவிடட்டுமா' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று சொன்னார்கள்.
நான் அவளை அழைத்துச் சென்றேன். அவளிடம், 'இறைவன் எங்கே இருக்கின்றான்' என்று அவர்கள் கேட்டார்கள். அவள், 'வானத்தில்' என்று பதிலளித்தாள். அடுத்து தம்மைக் குறித்து, 'நான் யார்' என்று கேட்டார்கள். அவள், 'நீங்கள் இறைவனின் தூதர்' என்றாள்.
🌸 நபியவர்கள் என்னிடம், 'அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் ஒரு இறைநம்பிக்கையுள்ள பெண்' என்றார்கள்.
 [முஆவியா பின் அல்ஹகமிஸ் ஸுலமீ (ரளி)
ஸஹீஹ் முஸ்லிம் - 935]

பராஅத் இரவின் சிறப்புகள்

பராஅத் இரவின் சிறப்புகள்
இஸ்லாத்தின் பார்வையில் ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் (பராஅத்) நோன்பு வைப்பதன் சிறப்பும், அவ்விரவில் மஃரிப் பின் சூரா யாஸீன் ஓதுவதன் அவசியமும்.

♣  பராஅத் இரவு என்றால் என்ன?
ஷஃபான் மாதம் பிறை 15ம் இரவுக்கு லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு), லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), லைலத்துல் பராஅத் (நரக விடுதலை பெறும் இரவு) என்றெல்லாம் கூறப்படும்.
இப்பெயர்கள் அந்த இரவிற்கு உண்டு என்கின்ற விவரம் தப்ஸீர் குர்துபியிலும், திர்மிதியின் விரிவுரை நூலான துஹ்ஃபதுல் அஹ்வதியிலும் மற்றும் பிரபலமான நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக இமாம் இக்ரிமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள். பராஅத் எனும் அரபி சொல்லுக்கு விடுதலை என்பது பொருளாகும். புனிதமிக்க அவ்விரவில் நரகவாசிகள் விடுதலை பெறுகிறார்கள் என்பதால் அந்த இரவிற்கு லைலதுல் பராஅத் (விடுதலை பெறும் இரவு) என பெயர் வந்தது.
நூல் ரூஹுல் பயான் பாகம் 13,பக்கம் 110,111

♣  ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் (பராஅத்) நோன்பு வைப்பது சுன்னத்தா?
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் கொண்டேயிருப்பான்.
அறிவிப்பவர்: ஸையிதினா அலி (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்கள் இப்னு மாஜா 1388, இமாம் பைஹகி - ஷுஃபுல் ஈமான் 3822
♦ ஒரு நாள் இரவு நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காணவில்லை. (உடனே எங்கே போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களைத் தேட ஆரம்பித்தேன்) அன்னவர்களோ ஜன்னத்துல் பகீஃ என்ற மதீனாவிலுள்ள முஸ்லிம்களின் மையவாடியில் தன் தலையை வானத்தின் பக்கம் உயர்த்தியவர்களாக இருந்தார்கள். (நான் திகைத்துப் போய் இருப்பதைக் கண்ட) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அல்லாஹ்வும் ரஸூலும் உங்களுக்கு அநீதம் செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறீர்களோ என்று கேட்டார்கள்.
நான் அதற்கு தங்களுடைய மனைவிமார்களில் எவருடைய வீட்டிற்கேனும் தாங்கள் வந்திருப்பீர்கள் என்று தான் நினைத்தேன் என்று கூறினேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் நிச்சயமாக அல்லாஹுதஆலா (பராஅத்துடைய இரவாகிய) ஷஃபான் மாதத்துடைய 15வது நாளின் இரவில் முதலாவது வானத்தில் இறங்கி பனீ குலைப் என்ற கோத்திரத்தார் வைத்திருக்கும் ஆடுகளினுடைய முடிகளின் எண்ணிக்கையை விட அதிகமான ஆட்களுக்கு பாவங்களை பொறுத்தருள்கிறான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல்கள் திர்மிதி 739, இப்னு மாஜா 1389, அஹ்மத் 6-238, மிஷ்காத் 1299)
ஆகவே இதிலிருந்து பராஅத் இரவைப்போன்று இறையருள் இறங்கும் இரவுகளில் கப்று ஜியாரத் விரும்பத்தக்கது என்பதும் தெளிவாகின்றது.
♦ பராஅத் இரவின் மகிமையைப் பற்றி மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஷஃபான் மாதத்தினுடைய சரிபாதியின் இரவாகிய இந்த இரவில் என்னென்ன இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்கள். அந்த இரவில் என்ன இருக்கின்றது நாயகமே! என்று நான் கேட்டேன். அப்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இந்த இரவில்தான் இந்த வருடத்தில் பிறக்கவிருக்கின்ற குழந்தைகள், இந்த வருடத்தில் இறக்கவிருக்கின்ற மனிதர்கள் பற்றிய விபரங்களை எழுதப்படுகினது. மேலும் இந்த இரவில்தான் அவர்களின் அமல்கள் உயர்த்தப்படுகின்றது. இந்த இரவில்தான் அவர்களின் உணவுகளும், இறக்கி வைக்கப்படுகின்றது.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல் மிஷ்காத் 1 305
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஜிப்ரயீல் அலைஹி வஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதம் பிறை 15 ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான்.
இமாம் பைஹகி ஷுஃபுல் ஈமான் 3837
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் இறைவன் அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன் மற்றும் விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் முஆத் இப்னு ஜபல் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்கள்: இப்னு ஹிப்பான் 5665, தப்ரானி (முஃஜமுல் அவ்ஸத்) 6776 அபூ மூஸல் அஷ்அரீ (ரலியல்லாஹு அன்ஹு) இப்னு மாஜா 1390
♦ கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஷஃபான் மாதம் 15 ம் இரவில் அல்லாஹு தஆலா தனது அடியார்களை நெருங்கி வருகிறான். இருவரை தவிர மற்றெல்லோரையும் மன்னித்து விடுகிறான். 1.பகைமை பாராட்டுபவன் 2. கொலை செய்தவன்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல் அஹ்மத் 6642

♣  ஷஃபான் மாதம் பிறை 15 ம் (பராஅத்) நாளென்று சூரா யாஸீன் ஓதுவதன் அவசியம்
ஷஃபான் மாதம் பிறை 15 ம் இரவில் மஃரிப் தொழுகையின் பிறகு மூன்று தடவைகள் சூரா யாஸீனை : முதலாவது தடவை ஓதும் போது 'பாவமன்னிப்புத் (பிழை பொறுக்கத்) தேடியும், இரண்டாவது தடவை ஓதும் போது ரிஸ்க் எனும் உணவு விச்தீரனம பெறவும், மூன்றாவது தடவை ஓதும் போது சரீர சுகத்தையும் ஆரோக்கியத்தையும் வேண்டி ஸாலிஹான அமல்கள் செய்வதற்கு நீண்ட ஆயுளை கேட்டு பிராத்தனை செய்து ஓத வேண்டும்'.
♦ அல்லாஹ் ஷஃபான் 15வது இரவில் சூரிய அஸத்தமனத்தின் போது முதல் வானத்திற்கு இறங்கி என்னிடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர் யார்? அருள் வேண்டுபவர் யார்? துயர் நீங்கக் கேட்பவர் யார்? மன்னிப்பதற்கும் அருள் வழங்கவும் ஆரோக்கியம் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். விடியும் வரையில் கூறிக் கொண்டே இருப்பான். எனவே அவ்விரவில் எழுந்து வணங்குங்கல் பகலில் நோன்பு வையுங்கள்.’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்; ஹழ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு
நூல் : இப்னுமாஜஹ்:1388
♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது. குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியதற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை அல்லாஹ் பதிவு செய்கிறான்.
நூல் திர்மிதீ 2812, தாரமி 3282
♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: யார் இறைவனின் திருப்பொருத்தம் நாடி யாசீன் (சூராவை) ஒதுகிறாறோ அவர் மன்னிக்கப்பட்டவர் ஆவார்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் ஜுன்துப் ரலியல்லாஹு அன்ஹு.
நூல் தாரமி 3322, இப்னு ஹிப்பான் 2639
♦ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி யாஸீன் ஓதுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஆகவே அதை உங்களில் இறந்தவர்களின் சமூகத்தில் ஓதுங்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் மஃகில் ரலியல்லாஹு அன்ஹு,
நூல்கள் முஸ்னத் அஹ்மத், பைஹகி 2458, மிஷ்காத் 2178
♦ “எவர் முற்பகலில் யாஸீன் ஓதுவாரோ அவருடைய தேவை நிறைவேற்றப்படும்” (நூல் தாரமி: 3418. மிஷ்காத்: 2171), “யாஸீனை காலையில் ஓதினால் மாலை வரை, மாலையில் ஓதினால் காலை வரை அன்றைய தினத்தின் காரியங்கள் கைகூடும்” என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள் (நூல் தாரமி)
ஆகவே தான் யாஸீன் ஓதி பராஅத் அன்று (மக்ரிப்) நேரத்தில் துஆவை நாம் கேட்டு வருகிறோம். (நூல் மிஷ்காத் ஹதீஸ் எண் 1308 விரிவுரையில், அல்லாமா முல்லா அலி காரி ரஹ்மதுல்லஹி அலைஹி அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது., ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப், ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் மற்றும் முன்னோர்களான நாதாக்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின்வரும் துஆவை ஓதி வந்தார்கள்) 'யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய், நாடுவதை உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது'. இந்த துஆவை ஷாஅபான் 15ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (நூல் மிர்காத்)
♦ பராஅத் இரவில் நாமும் சஹாபாக்களைப் பின்பற்றி இந்த ஹதீஸில் வந்த துஆவைத் தான் ஓதி வருகிறோம் ஒவ்வொன்றுக்கும் தவணை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. எனினும் அல்லாஹ் அவன் நாடியதை அதில் அழித்து விடுவான். அவன் நாடியதை உறுதியாக்கிவிடுவான் அவனிடத்தில் அசல் பதிவு இருக்கிறது”
(அல் குர்ஆன்.13:38, 39)
♦ எவர் தனது ரிஸ்க் (வாழ்வாதாரம்) விரிவடைய வேண்டும் தனது ஆயுள் நீளமாக வேண்டும் என்று விரும்புவாரோ அவர் தனது உறவுகளை சேர்த்துக்கொள்ளட்டும்.
நூல் புகாரி: 5986, முஸ்லிம்: 1982
மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனம், ஹதீஸில் ஒரு மனிதனின் ஆயுள் காலம், அவனது ரிஸ்க் கூடவும் குறையவும் செய்யும் என்று தெரிகிறது.“அல்லாஹ்வுடைய விதியான ஆயுள் காலம் எப்படி அதிகரிக்கப்படும்” என்று, இந்த நபிமொழித் தொடரில்., இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்., அல்லாஹ் குர்ஆனில், “அவன் தான் உங்களைக் களிமண்ணால் படைத்து உங்களுக்குரிய தவணையை வாழ்நாளைக் குறிப்பிட்டு நிர்ணயம் செய்தவன். அவனிடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையும் உண்டு” என்று (அல்குர்ஆன் 6: 2-ல்) கூறுகின்றான். இந்த வசனத்தில் இரண்டு அஜலை தவணையை குறிப்பிடுகிறான் முதல் தவணை என்பது பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள இவ்வுலக ஆயுள் காலம் ஆகும். இரண்டாவது தவணை என்பது இறந்த பிறகு இறைவனை மறுமையில் சந்திக்கும் வரையில் உள்ள கபுறுடைய ஆயுள் காலம் ஆகும்.
ஒருவன் அல்லாஹ்வுக்குப் பயந்து தனது பெற்றோர்களை ஆதரித்து, உறவினர்களை சேர்த்துக்கொண்டால் அவனுடைய கபுருடைய ஆயுள் காலத்திலிருந்து அவன் நாடுமளவு எடுத்து இவ்வுலக ஆயுள் காலத்தை நீட்டுவான். இதன்படி கபுறுடைய ஆயுள் காலம் அவன் எடுத்த அளவு குறையும். அல்லாஹ்வுக்கு மாறு செய்து உறவுகளைத் துண்டித்து வாழ்ந்தால் இவ்வுலக ஆயுளைக் குறைத்து கபுறுடைய ஆயுளைக் கூட்டிவிடுவான். ஆக, மொத்தத்தில் மாற்றம் நிகழாமல், இவ்வுலக ஆயுள் காலம் கூடவும் குறையவும் செய்யும், என்று அற்புதமான விளக்கத்தை இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) வழங்கினார்கள்.
நூல் தப்ஸீர் குர்துபி: 1339 விரிவுரை

♣  பாக்கியமிகு பராஅத் இரவின் சிறப்புகள்
ஹா மீம், தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுல்லா ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம் உறுதியான எல்லா காரியங்களும் அதில் தான் நம்முடைய கட்டளையின் படி (நிர்மாணிக்கப்பட்டு) பிரித்துக்கொடுக்கப்படுகின்றன.
அல் குர்ஆன் 44:1, 2, 3, 4
இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள புனித இரவைக் கொண்டு உத்தேசம் என்ன? லைலதுல் கத்ருடைய இரவா? பராஅத் இரவா? இதில் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும், சரியான கருத்து லைலத்துல் கத்ருடைய இரவு என்றிருந்தாலும் பராஅத் இரவில் இறைத்தீர்புகள் எழுதப்படுகிறது என்பதில் எந்தக்கருத்து வேறுபாடும் இல்லை. ஏனெனில் இது பற்றி நபி மொழிகள் தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு இரவிலும் காரியங்கள் தீர்மானிக்கப்படுகிறது, என்று, இறை வசனத்திலிருந்து நபி மொழியிலிருந்தும் பெறப்படுகிறது. இது இந்த இரண்டு இரவின் சிறப்பை பறை சாட்டுவதாக இருக்கிறது என்று (மிஷ்காத் நபி மொழி தொகுப்பின் விரிவுரையாளர்) அல்லாம முல்லா அலி காரி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்.
மிஷ்காத் 1305 விரிவுரை மிர்காத், தப்ஸீர் அஸ்ஸாவி பாகம் 4,பக்கம் 57,58
♦ அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் இந்த ஷஃபான் பதினைத்தாவது (இரவான பராஅத்) இரவின் சிறப்பு என்னவென்று தெரியுமா? என அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களிடம் கேட்டு விட்டு கூறினார்கள்; இதில் தான் இந்த வருடத்திற்கான மனித பிறப்பும் இறப்பும் எழுதப்படும். இதில் தான் அவர்களின் அமல்கள் (செயல்கள்) உயர்த்தப்பும். இதில் தான் அவர்களின் ரிஸ்க் (வாழ்வாதரங்கள்) இறங்கும்.
நூல் பைஹகி, மிஷ்காத்: 1302
♦ ஹளரத் அதா இப்னு யஸார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள், ஷஃபான் பதினைந்தாவது இரவன்று மலக்குல் மௌத் இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாமை அழைத்து ஷஃபானிலிருந்து எதிர்வரும் ஷஃபான் வரையிலான காலப்பகுதிக்குள்ள மரணிக்க இருப்பவர்களின் பெயர் பட்டியல் வழங்கப்படும்.ஒருவர் மரம் நாட்டுவார், திருமணம் முடிப்பார், உயர் கட்டிடம் கட்டுவார். ஆனால், அவர் பெயர் மரணிப்பவரின் பட்டியலிலிருக்கும். மலக்குல் மௌத் ஆகிய இஸ்றாயீல் அலைஹிஸ்ஸலாம் அவரின் உயிரை எடுப்பதற்கு, அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.
நூல் முகாஷபத்துல் குலூப்
ஆகவே இறப்பு, பிறப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு, லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது, என்று இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். இந்த வகையில் பராஅத் இரவு என்பது, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு பட்ஜெட், லைலத்துல் கத்ருடைய இரவில் தாக்கல் செய்வதற்குரிய பூர்வாங்கப் பணிகளை துவங்கும் நாளாகும்.

Thoulath ali Kashifi:


هذه بعض آيات القرآن الكريم حول الصلاة .. آيات تبين اهميه الصلاة وآيات تأمر بالصلاة والحفاظ عليها وآيات تبشر بالخير لمن حافظ عليها واخرى تنذر بعذاب شديد لمن تركها واخرى
قَدْ أَفْلَحَ المُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3) وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ (4) وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلاَّ عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ العَادُونَ (7) وَالَّذِينَ هُمْ لآمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ (8) وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ (9) أُوْلَئِكَ هُمُ الوَارِثُونَ (10) الَّذِينَ يَرِثُونَ الفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ (11) المؤمنون
الـم (1) الكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ (2) الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ (3) البقرة
وَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ (43) البقرة
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَى الخَاشِعِينَ (45) البقرة
وَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ (110) البقرة
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بْالصَّبْرِ وَالصَّلاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ (153) البقرة
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاةِ الوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ (238) البقرة
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ (277) البقرة
فَإِذَا قَضَيْتُمُ الصَّلاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَاماً وَقُعُوداً وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنتُمْ فَأَقِيمُوا الصَّلاةَ إِنَّ الصَّلاةَ كَانَتْ عَلَى المُؤْمِنِينَ كِتَاباً مَّوْقُوتاً (103) النساء
إِنَّمَا المُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَاناً وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ (2) الَّذِينَ يُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ (3) الانفال
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَن يُوقِعَ بَيْنَكُمُ العَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلاةِ فَهَلْ أَنتُم مُّنتَهُونَ (91) المائده
وَأَنْ أَقِيمُوا الصَّلاةَ وَاتَّقُوهُ وَهُوَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ (72) الانعام
وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ مُّصَدِّقُ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَلِتُنذِرَ أُمَّ القُرَى وَمَنْ حَوْلَهَا وَالَّذِينَ يُؤْمِنُونَ بِالآخِرَةِ يُؤْمِنُونَ بِهِ وَهُمْ عَلَى صَلاتِهِمْ يُحَافِظُونَ (92) الانعام
وَالَّذِينَ يُمَسِّكُونَ بِالْكِتَابِ وَأَقَامُوا الصَّلاةَ إِنَّا لاَ نُضِيعُ أَجْرَ المُصْلِحِينَ (170) الاعراف
قُل لِّعِبَادِيَ الَّذِينَ آمَنُوا يُقِيمُوا الصَّلاةَ وَيُنفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِراًّ وَعَلانِيَةً مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لاَّ بَيْعٌ فِيهِ وَلاَ خِلالٌ (31) ابراهيم
الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَالصَّابِرِينَ عَلَى مَا أَصَابَهُمْ وَالْمُقِيمِي الصَّلاةِ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ (35) الحج
رِجَالٌ لاَّ تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلاَ بَيْعٌ عَن ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْماً تَتَقَلَّبُ فِيهِ القُلُوبُ وَالأَبْصَارُ (37) النور
وَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (56) النور
طس‌ تِلْكَ آيَاتُ القُرآنِ وَكِتَابٍ مُّبِينٍ (1) هُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ (2) الَّذِينَ يُقِيمُونَ الصَّلاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُم بِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ (3) النمل
اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الكِتَابِ وَأَقِمِ الصَّلاةَ إِنَّ الصَّلاةَ تَنْهَى عَنِ الفَحْشَاءِ وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ (45) العنكبوت
فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا فِطْرَةَ اللَّهِ الَتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ القَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَعْلَمُونَ (30) مُنِيبِينَ إِلَيْهِ وَاتَّقُوهُ وَأَقِيمُوا الصَّلاةَ وَلاَ تَكُونُوا مِنَ المُشْرِكِينَ (31) الروم
الـم (1) تِلْكَ آيَاتُ الكِتَابِ الحَكِيمِ (2) هُ
دًى وَرَحْمَةً لِّلْمُحْسِنِينَ (3) الَّذِينَ يُقِيمُونَ الصَّلاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُم بِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ (4) أُوْلَئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُوْلَئِكَ هُمُ المُفْلِحُونَ (5) لقمان
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلاةِ مِن يَوْمِ الجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا البَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ (9) فَإِذَا قُضِيَتِ الصَّلاةُ فَانتَشِرُوا فِي الأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّّهَ كَثِيراً لَّعَلَّكُمْ تُفْلِحُونَ (10) الجمعه
إِنَّ الإِنسَانَ خُلِقَ هَلُوعاً (19) إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعاً (20) وَإِذَا مَسَّهُ الخَيْرُ مَنُوعاً (21) إِلاَّ المُصَلِّينَ (22) الَّذِينَ هُمْ عَلَى صَلاتِهِمْ دَائِمُونَ (23) وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُومٌ (24) لِلسَّائِلِ وَالْمَحْرُومِ (25) المعارج
وَالَّذِينَ هُمْ عَلَى صَلاتِهِمْ يُحَافِظُونَ (34) أُوْلَئِكَ فِي جَنَّاتٍ مُّكْرَمُونَ (35) المعارج
وَمَا أُمِرُوا إِلاَّ لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ القَيِّمَةِ (5) البينه
إِنَّ المُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلاَ يَذْكُرُونَ اللَّهَ إِلاَّ قَلِيلاً (142) النساء
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَتَّخِذُوا الَّذِينَ اتَّخَذُوا دِينَكُمْ هُزُواً وَلَعِباً مِّنَ الَّذِينَ أُوتُوا الكِتَابَ مِن قَبْلِكُمْ وَالْكُفَّارَ أَوْلِيَاءَ وَاتَّقُوا اللَّهَ إِن كُنتُم مُّؤْمِنِينَ (57) وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلاةِ اتَّخَذُوهَا هُزُواً وَلَعِباً ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لاَّ يَعْقِلُونَ (58) المائده

~~~~~~~~~~~~
لماذا لانصلي ؟؟؟؟؟؟؟؟؟
هل الصلاة ثقيله لهذا الحد ؟؟؟؟؟؟؟ والعياذ بالله
ماهي الا بضع دقائق طاعه لله عز وجل وراحه للنفس وصحه للجسم
عن سالم بن أبي الجعد قال - قال رجل ليتني صليت فاسترحت فكأنهم عابوا عليه ذلك فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا بلال أقم الصلاة أرحنا بها * ( صحيح ) _ المشكاة 1253
قال رسول الله صلى الله عليه وسلم: (إذا جاءكم من ترضون دينه وخلقه فأنكحوه إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد . قالوا: وإن كان فيه؟ قال: إذا جاءكم من ترضون دينه وخلقه فأنكحوه ) ثلاث مرات . رواه الترمذي وهو حديث حسن كما قال الشيخ الألباني ..
وهذا الحديث يقرر أصلاً مهماً في الزواج وهو اعتبار الكفاءة في الدين فإن تارك الصلاة ليس كفؤاً للمرأة الصالحة وتارك الصلاة لا ينبغي أن يتم تزويجه لأن أمره دائر بين الكفر والفسق على اختلافٍ بين العلماء في حاله
اخواني الكرام .. لماذا تناسينا الصلاة ؟؟؟؟؟؟؟؟؟؟؟؟
لماذا نذهب للمصايف ونتمشى في الاسواق ونلعب على الكمبيوتر ونقعد على القهاوي وغيره وغيره
لماذا والف لماذا ,, في مقابل اننا لانكلف انفسنا للنزول الى المسجد اسفل المنزل للصلاة في بعض دقائق وحتى الصلاة في البيت لانؤديها .... لماذا
يااخواني الكرام ,, حتى المريض ليس له عذر في ترك الصلاة
يصلي المريض قائماً، فإن لم يستطع فقاعداً، فإن لم يستطع فعلى جنبه الأيمن، فإن لم يستطع فعلى جنب الأيسر، فإن لم يستطع صلى مستلقياً على ظهره، فإن لم يستطع أومأ برأسه، فإن لم يستطع أشار بيده، فإن لم يتذكر لُقن، وهكذا، فإن عجز عن الإشارة بيده أومأ بطرفه، فإن عجز أجرى أفعال الصلاة على قلبه، فإن حبس لسانه وجب أن يجري القرآن والأذكار الواجبة على قلبه كما يجري الأفعال
ماذا اكثر من ذلك ,,,
اغتنمو اخواني صحتكم قبل مرضكم ,, فوالله هناك العديد من الاشخاص اصيبو بشلل من حوادث وكل امانيهم في الحياة الآن ,, هو الصلاة .. وحقاً لانشعر بقيمة الاشياء الا بعد فقدانها
الصلاة - الصلاة - الصلاة
بالله عليكم لاتهملوها .. من اجل دنياكم وآخرتكم
إِلاَّ أَصْحَابَ اليَمِينِ (39) فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ (40) عَنِ المُجْرِمِينَ (41) مَا سَلَكَكُمْ فِي سَقَرَ (42) قَالُوا لَمْ نَكُ مِنَ المُصَلِّينَ (43) وَلَمْ نَكُ نُطْعِمُ المِسْكِينَ (44) وَكُنَّا نَخُوضُ مَعَ الخَائِضِينَ (45) وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ (46) حَتَّى أَتَانَا اليَقِينُ (47) المدثر
واسأل الله لي ولكم التوفيق في الدنيا والآخره ..
وآخر دعاءي هو دعاء سيدنا ابراهيم عليه السلام في سورة ابراهيم
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ (40)
 
والسلام عليكم ورحمة الله وبركاته

ஒரு கற்பனை! ஒரு நிஜம்! ஒரு படிப்பினை!

                      🍄 ஒரு கற்பனை! ஒரு நிஜம்! ஒரு படிப்பினை!
▪ கற்பனை : அது ஒரு வறுமையில் வாடும் முஅத்தின் (தொழுகைக்கு அழைப்பு விடுப்பவர்) குடும்பம். பள்ளிவாயிலில் பாங்கு சொல்லி விட்டு, பல வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் உணவுகளைப் பகிர்ந்து சாப்பிடும் நிலை. ஓட்டு வீட்டில் சின்ன கைமேசையில் அன்று வசூலித்த ஊர் வரியை கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார் முஅத்தின்.
வறுமையால் தயாரிக்கப்பட்ட, பால் கலக்காத டிகாஷன் காஃபியைக் கொண்டு வந்து நீட்டினார் அவருடைய மனைவி. முஅத்தின் கீழே வச்சுட்டுப் போ என்று சாடை காட்ட, அவர் அதைத் தரையில் வைத்து விட்டு உள்ளே போனார்.
ஏதோ ஒரு அதிசயத்தைக் கண்டு விட்டு, அதைத் தன் வாப்பாவிடம் சொல்ல ஆவலுடன் ஓடி வந்தாள், அவருடைய நான்கு வயது மகள். காஃபியைக் கவனிக்கவில்லை. கால் பட்டுக் கொட்டி விட்டது. பயத்தில் அப்படியே நின்று விட்டாள். வாப்பா என்ன சொல்வாரோ என்று நடுங்கிக் கொண்டிருந்தாள்.
அந்தக் காஃபி, நம்ம வீட்டில் கொட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? (ஒரு சிறு கற்பனைதான :)
'சனியனே! அங்க என்ன கொள்ளை போகுதுன்னு போற... உன்னாலதான் காஃபி கொட்டிப் போச்சு' என்று நம் மனைவி மீது, நாம் சுடும் வார்த்தை களைக் கொட்ட,
'இவுரு பெரிசா சம்பாரிச்சுக் கிழிக்கிறாரரு... உடனே காஃபியக் குடிச்சா என்னவாம்' என்று நம் மனைவி, நம்மீது கடும் வார்த்தைகளைக் கொட்ட,
இரண்டும் நடக்காவிட்டால், நாமும் நமது மனைவி யும் நீதிபதியாக மாறி, 'எல்லாம் இந்த சனியனால வந்ததுதான்' என்று பிள்ளை மீது வார்த்தைக ளைக் கொட்ட,
ஒரு சொம்புத் தண்ணீர் ஊற்றிக் கழுவி விட்டால், காணாமல் போய் விடக்கூடிய காஃபிக் கொட்ட லுக்கு, கழுவவே முடியாத அளவுக்கு பெரும் வார்த்தைக் கொட்டல்களே அங்கே அரங்கேறி இருக்கும் இல்லையா?
ஆனால், அந்த முஅத்தின் வீட்டில் நடந்தது என்ன தெரியுமா உங்களுக்கு..?
காஃபி கொட்டிய கவலையை விட, கொட்டியதால் குழந்தை பயந்து நடுங்குறாளே என்று கவலைப் பட்ட முஅத்தின், 'அதை விடுடா கண்ணு...போனால் போகுது...ஆமா, ஏதோ சொல்ல வந்தியேடா, அத முதல்ல சொல்லு' என்று ஆறுதல் சொல்ல,
'இல்ல வாப்பா...காஃபியை நான்தான் கொட்டிட்
டேன். தப்பு என்னோடதுதான்...நான் பாத்து வந்து ருக்கணும்' என்று தவறைத் தன் பக்கம் மகள் திருப்ப,
'சேச்சே...வாப்பா நான்தான் தப்பு பண்ணினேன். உம்மா காஃபி கொடுத்ததும், நான் குடிச்சிருந்தா அது கொட்டியிருக்குமா, தப்பு என்னோடதுதான்' என்று முஅத்தின் சொல்ல,
உள்ளே இருந்து பதறியபடி வந்த உம்மா, 'அடடா, காஃபிய நீங்க குடிச்சுட்டு கொடுக்கிற வரைக்கும் நின்னு, வாங்கிட்டுப் போயிருக்கணும்...எனக்கு என்ன அவசரம் வந்தது...அதனால தப்பு என்னது தான்' என்று தப்பை தன் மீது போட்டுக் கொள்ள கொட்டப்பட்ட காஃபியே அங்கே புல்லரித்து நின்றது.
          இது எந்த ஊரில் நடந்தது,
          எந்தத் தெருவில் நடந்தது,
          எந்த வீட்டில் நடந்தது,
          அந்த வீட்டு எண் என்ன,
          அந்த வாப்பா, உம்மா, மகள் யாரு
என்று பரபரத்து கேள்வி கேட்பதை விட, ஏன், அந்த வாப்பாவும் உம்மாவும் மகளுமாக நாம இருக்கக் கூடாது..? தயவு கூர்ந்து யோசியங்கள்!
▪ நிஜம் : ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது துணைவியருள் ஒருவரின் இல்லத்தில் தங்கி  இருந்தார்கள்.
நபியவர்களுடைய மற்றொரு துணைவி ஒருவர்,  ஆசையுடன் உணவுப் பண்டம் தயாரித்து, அதை ஒரு தட்டில் வைத்து, நபியவர்களுக்காக தமது  பணியாளர் ஒருவரிடம் கொடுத்தனுப்பினார்.
அப்போது நபியவர்கள், எவருடைய வீட்டில் தங்கி யிருந்தார்களோ அந்தத் துணைவி, ரோஷத்தில் அந்தப் பணியாளரின் கையில் இருந்த தட்டை, வேகமாகத் தட்டிவிட்டார். அது கீழே விழுந்து உடைந்துவிட்டது.
உடனே ஆத்திரப்படாமல் நபியவர்கள், அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்
கள். பிறகு, தட்டிலிருந்த உணவை, மீண்டும் அதி லேயே எடுத்துப் போட்டார்கள்.
அங்கிருந்த தோழர்களை நோக்கி, 'உங்கள் தாய் சற்று ரோஷப்பட்டுவிட்டார், வேறொன்றும் இல்லை' என்றும் புன்னகையுடன் கூறினார்கள்.
பின்னர், அந்தப் பணியாளரை சற்று நேரம் அங்கே இருக்கச் செய்து, தாம் தங்கியிருந்த வீட்டுக்காரத் துணைவியிடம் மற்றொரு தட்டைக்கொண்டு வரச் சொல்லி, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை மாற்றாகக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். [அனஸ் (ரளி) • புகாரி - 5225]
🍄 படிப்பினை என்ன? நீங்களே கூறுங்களேன்!

ஹபீபுல்லாஹ் இறைவனின் நண்பர்


கண்மணி முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்கு ஹபீபுல்லாஹ் இறைவனின் நண்பர் என்று ஒரு பெயர் உண்டு .
இவர்கள் என்னுடைய நண்பர் என்று அல்லாஹ் ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை. அல்லாஹ் முஹம்மத் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை எப்படி நேசித்தான் என்பதற்கு சில உதாரணங்கள்.
1.அபுலஹப் நாயகத்தை திட்டிய போது அல்லாஹ் அபீலஹபை சபிக்கிறான் .
2.ஒரு யூதன் ஆன் வாரிசு இல்லாதவர் என்று நபிய்யுல்லாஹ் அவர்களை பார்த்து கூறியபோது அந்த யூதனை அல்லாஹ் சபிக்கிறான்
3.நபிகளுக்கு முன்னாள் உங்கள் குரலை உயர்த்த வேண்டாம் என்று கூறி நபியை கண்ணியப்படுத்துகிறான் .
4.பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுத நேரத்தில் கஹ்பத்துல்லாவை கிப்லாவா ஆக்கினால் நன்றாக இருக்குமே என எண்ணி நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நினைத்த போது கஹ்பதுல்லாஹ்வை நோக்கி தொழ உத்தரவு பிறப்பிக்கிறான்
5. நபியுடைய மனைவி மார்கள் சில பிரச்சனைகள் செய்த போது நபிக்காக பரிந்து பேசுகிறான் .
6.குர்ஆன் மறந்து விடுமோ என்ற எண்ணத்தில் வேக வேகமாக ஓதிய போது உங்கள் மனதில் நாம் பதிய வைப்போம் நீங்கள் சிரமப்படாதீர்கள் என்று கூறி சிரமத்தை குறைக்கிறான்
7. மக்கள் இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும்போது நபிகளின் கவலையை பார்த்த அல்லாஹ் இந்த மக்களின் மீது கவலை கொண்டு உங்களை நீங்களே அழித்துக்கொள்வீர்கள் போலிருக்கிறது என கூறி கவலையை நீக்குகிறான்.
8.குர் ஆனிலே மற்ற நபிமார்களின் பெயரை நேரடியாக அழைத்த அல்லாஹ் நபிகளின் பெயரை மட்டும் நேரடியாக அழைக்காமல் யாஸீன் ,தாஹா என்றும் முஹம்மத் என்ற பெயரை கூறினாலும் அதோடு ரசூலுல்லாஹ் என்ற பெயரையும் இணைத்தே அழைத்து அழகு பார்க்கிறான் .
9.நபியே உம புகழை நாம் உயர்த்துவோம் என்று கூறுகிறான் .
10.நபிய்யுல்லாஹ் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மீது நானும் வானவர்களும் சலவாத் சொல்கிறோம் நீங்களும் சலவாத் சொல்லுங்கள் என கட்டளையிடுகிறான்(சல்லல்லாஹு அலைஹி வசல்லம் )
11.f ப அவ்ஹா இலா அப்திஹி மா அவ்ஹா என்று கூறி ரகசியம் பேசுகிறான்
12.ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அண்ணலாரை திருமணம் செய்து வைக்கிறான் .
இவை அனைத்தையும் விட "நபியே நீங்கள் கூறுங்கள் ...
அல்லாஹ் உங்களை(மனிதர்களை ) நேசிக்க வேண்டுமென்றால்
என்னை(நபியவர்களை ) பின்பற்றுங்கள்
அல்லாஹ் உங்களை(மனிதர்களை ) நேசிப்பான் என கூறுங்கள் " என்று கூறி இம்மை மறுமை அனைத்தும் அண்ணலாரை நேசிப்பதிலும் பின் பற்றுவதிலே இருக்கிறது என்று கூறி நம்முடைய வெற்றி தோல்வி அனைத்தும் அண்ணலம்பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை பின் பற்றுவதிலே இருக்கிறது என்று நமக்கு கடிவாளத்தை போடுகிறான் .
அல்லாஹும்ம ஸல்லி அலா சையிதினா முஹம்மதிவ்(சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) வ அலா ஆலி முஹம்மதிவ்(சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) வபாரிக் வ சல்லிம் அலைஹி !