🍄 ஒரு கற்பனை! ஒரு நிஜம்! ஒரு படிப்பினை!
▪ கற்பனை : அது ஒரு வறுமையில் வாடும் முஅத்தின் (தொழுகைக்கு அழைப்பு விடுப்பவர்) குடும்பம். பள்ளிவாயிலில் பாங்கு சொல்லி விட்டு, பல வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் உணவுகளைப் பகிர்ந்து சாப்பிடும் நிலை. ஓட்டு வீட்டில் சின்ன கைமேசையில் அன்று வசூலித்த ஊர் வரியை கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார் முஅத்தின்.
வறுமையால் தயாரிக்கப்பட்ட, பால் கலக்காத டிகாஷன் காஃபியைக் கொண்டு வந்து நீட்டினார் அவருடைய மனைவி. முஅத்தின் கீழே வச்சுட்டுப் போ என்று சாடை காட்ட, அவர் அதைத் தரையில் வைத்து விட்டு உள்ளே போனார்.
ஏதோ ஒரு அதிசயத்தைக் கண்டு விட்டு, அதைத் தன் வாப்பாவிடம் சொல்ல ஆவலுடன் ஓடி வந்தாள், அவருடைய நான்கு வயது மகள். காஃபியைக் கவனிக்கவில்லை. கால் பட்டுக் கொட்டி விட்டது. பயத்தில் அப்படியே நின்று விட்டாள். வாப்பா என்ன சொல்வாரோ என்று நடுங்கிக் கொண்டிருந்தாள்.
அந்தக் காஃபி, நம்ம வீட்டில் கொட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? (ஒரு சிறு கற்பனைதான :)
'சனியனே! அங்க என்ன கொள்ளை போகுதுன்னு போற... உன்னாலதான் காஃபி கொட்டிப் போச்சு' என்று நம் மனைவி மீது, நாம் சுடும் வார்த்தை களைக் கொட்ட,
'இவுரு பெரிசா சம்பாரிச்சுக் கிழிக்கிறாரரு... உடனே காஃபியக் குடிச்சா என்னவாம்' என்று நம் மனைவி, நம்மீது கடும் வார்த்தைகளைக் கொட்ட,
இரண்டும் நடக்காவிட்டால், நாமும் நமது மனைவி யும் நீதிபதியாக மாறி, 'எல்லாம் இந்த சனியனால வந்ததுதான்' என்று பிள்ளை மீது வார்த்தைக ளைக் கொட்ட,
ஒரு சொம்புத் தண்ணீர் ஊற்றிக் கழுவி விட்டால், காணாமல் போய் விடக்கூடிய காஃபிக் கொட்ட லுக்கு, கழுவவே முடியாத அளவுக்கு பெரும் வார்த்தைக் கொட்டல்களே அங்கே அரங்கேறி இருக்கும் இல்லையா?
ஆனால், அந்த முஅத்தின் வீட்டில் நடந்தது என்ன தெரியுமா உங்களுக்கு..?
காஃபி கொட்டிய கவலையை விட, கொட்டியதால் குழந்தை பயந்து நடுங்குறாளே என்று கவலைப் பட்ட முஅத்தின், 'அதை விடுடா கண்ணு...போனால் போகுது...ஆமா, ஏதோ சொல்ல வந்தியேடா, அத முதல்ல சொல்லு' என்று ஆறுதல் சொல்ல,
'இல்ல வாப்பா...காஃபியை நான்தான் கொட்டிட்
டேன். தப்பு என்னோடதுதான்...நான் பாத்து வந்து ருக்கணும்' என்று தவறைத் தன் பக்கம் மகள் திருப்ப,
'சேச்சே...வாப்பா நான்தான் தப்பு பண்ணினேன். உம்மா காஃபி கொடுத்ததும், நான் குடிச்சிருந்தா அது கொட்டியிருக்குமா, தப்பு என்னோடதுதான்' என்று முஅத்தின் சொல்ல,
உள்ளே இருந்து பதறியபடி வந்த உம்மா, 'அடடா, காஃபிய நீங்க குடிச்சுட்டு கொடுக்கிற வரைக்கும் நின்னு, வாங்கிட்டுப் போயிருக்கணும்...எனக்கு என்ன அவசரம் வந்தது...அதனால தப்பு என்னது தான்' என்று தப்பை தன் மீது போட்டுக் கொள்ள கொட்டப்பட்ட காஃபியே அங்கே புல்லரித்து நின்றது.
இது எந்த ஊரில் நடந்தது,
எந்தத் தெருவில் நடந்தது,
எந்த வீட்டில் நடந்தது,
அந்த வீட்டு எண் என்ன,
அந்த வாப்பா, உம்மா, மகள் யாரு
என்று பரபரத்து கேள்வி கேட்பதை விட, ஏன், அந்த வாப்பாவும் உம்மாவும் மகளுமாக நாம இருக்கக் கூடாது..? தயவு கூர்ந்து யோசியங்கள்!
▪ நிஜம் : ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது துணைவியருள் ஒருவரின் இல்லத்தில் தங்கி இருந்தார்கள்.
நபியவர்களுடைய மற்றொரு துணைவி ஒருவர், ஆசையுடன் உணவுப் பண்டம் தயாரித்து, அதை ஒரு தட்டில் வைத்து, நபியவர்களுக்காக தமது பணியாளர் ஒருவரிடம் கொடுத்தனுப்பினார்.
அப்போது நபியவர்கள், எவருடைய வீட்டில் தங்கி யிருந்தார்களோ அந்தத் துணைவி, ரோஷத்தில் அந்தப் பணியாளரின் கையில் இருந்த தட்டை, வேகமாகத் தட்டிவிட்டார். அது கீழே விழுந்து உடைந்துவிட்டது.
உடனே ஆத்திரப்படாமல் நபியவர்கள், அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்
கள். பிறகு, தட்டிலிருந்த உணவை, மீண்டும் அதி லேயே எடுத்துப் போட்டார்கள்.
அங்கிருந்த தோழர்களை நோக்கி, 'உங்கள் தாய் சற்று ரோஷப்பட்டுவிட்டார், வேறொன்றும் இல்லை' என்றும் புன்னகையுடன் கூறினார்கள்.
பின்னர், அந்தப் பணியாளரை சற்று நேரம் அங்கே இருக்கச் செய்து, தாம் தங்கியிருந்த வீட்டுக்காரத் துணைவியிடம் மற்றொரு தட்டைக்கொண்டு வரச் சொல்லி, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை மாற்றாகக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். [அனஸ் (ரளி) • புகாரி - 5225]
🍄 படிப்பினை என்ன? நீங்களே கூறுங்களேன்!
▪ கற்பனை : அது ஒரு வறுமையில் வாடும் முஅத்தின் (தொழுகைக்கு அழைப்பு விடுப்பவர்) குடும்பம். பள்ளிவாயிலில் பாங்கு சொல்லி விட்டு, பல வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் உணவுகளைப் பகிர்ந்து சாப்பிடும் நிலை. ஓட்டு வீட்டில் சின்ன கைமேசையில் அன்று வசூலித்த ஊர் வரியை கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார் முஅத்தின்.
வறுமையால் தயாரிக்கப்பட்ட, பால் கலக்காத டிகாஷன் காஃபியைக் கொண்டு வந்து நீட்டினார் அவருடைய மனைவி. முஅத்தின் கீழே வச்சுட்டுப் போ என்று சாடை காட்ட, அவர் அதைத் தரையில் வைத்து விட்டு உள்ளே போனார்.
ஏதோ ஒரு அதிசயத்தைக் கண்டு விட்டு, அதைத் தன் வாப்பாவிடம் சொல்ல ஆவலுடன் ஓடி வந்தாள், அவருடைய நான்கு வயது மகள். காஃபியைக் கவனிக்கவில்லை. கால் பட்டுக் கொட்டி விட்டது. பயத்தில் அப்படியே நின்று விட்டாள். வாப்பா என்ன சொல்வாரோ என்று நடுங்கிக் கொண்டிருந்தாள்.
அந்தக் காஃபி, நம்ம வீட்டில் கொட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? (ஒரு சிறு கற்பனைதான :)
'சனியனே! அங்க என்ன கொள்ளை போகுதுன்னு போற... உன்னாலதான் காஃபி கொட்டிப் போச்சு' என்று நம் மனைவி மீது, நாம் சுடும் வார்த்தை களைக் கொட்ட,
'இவுரு பெரிசா சம்பாரிச்சுக் கிழிக்கிறாரரு... உடனே காஃபியக் குடிச்சா என்னவாம்' என்று நம் மனைவி, நம்மீது கடும் வார்த்தைகளைக் கொட்ட,
இரண்டும் நடக்காவிட்டால், நாமும் நமது மனைவி யும் நீதிபதியாக மாறி, 'எல்லாம் இந்த சனியனால வந்ததுதான்' என்று பிள்ளை மீது வார்த்தைக ளைக் கொட்ட,
ஒரு சொம்புத் தண்ணீர் ஊற்றிக் கழுவி விட்டால், காணாமல் போய் விடக்கூடிய காஃபிக் கொட்ட லுக்கு, கழுவவே முடியாத அளவுக்கு பெரும் வார்த்தைக் கொட்டல்களே அங்கே அரங்கேறி இருக்கும் இல்லையா?
ஆனால், அந்த முஅத்தின் வீட்டில் நடந்தது என்ன தெரியுமா உங்களுக்கு..?
காஃபி கொட்டிய கவலையை விட, கொட்டியதால் குழந்தை பயந்து நடுங்குறாளே என்று கவலைப் பட்ட முஅத்தின், 'அதை விடுடா கண்ணு...போனால் போகுது...ஆமா, ஏதோ சொல்ல வந்தியேடா, அத முதல்ல சொல்லு' என்று ஆறுதல் சொல்ல,
'இல்ல வாப்பா...காஃபியை நான்தான் கொட்டிட்
டேன். தப்பு என்னோடதுதான்...நான் பாத்து வந்து ருக்கணும்' என்று தவறைத் தன் பக்கம் மகள் திருப்ப,
'சேச்சே...வாப்பா நான்தான் தப்பு பண்ணினேன். உம்மா காஃபி கொடுத்ததும், நான் குடிச்சிருந்தா அது கொட்டியிருக்குமா, தப்பு என்னோடதுதான்' என்று முஅத்தின் சொல்ல,
உள்ளே இருந்து பதறியபடி வந்த உம்மா, 'அடடா, காஃபிய நீங்க குடிச்சுட்டு கொடுக்கிற வரைக்கும் நின்னு, வாங்கிட்டுப் போயிருக்கணும்...எனக்கு என்ன அவசரம் வந்தது...அதனால தப்பு என்னது தான்' என்று தப்பை தன் மீது போட்டுக் கொள்ள கொட்டப்பட்ட காஃபியே அங்கே புல்லரித்து நின்றது.
இது எந்த ஊரில் நடந்தது,
எந்தத் தெருவில் நடந்தது,
எந்த வீட்டில் நடந்தது,
அந்த வீட்டு எண் என்ன,
அந்த வாப்பா, உம்மா, மகள் யாரு
என்று பரபரத்து கேள்வி கேட்பதை விட, ஏன், அந்த வாப்பாவும் உம்மாவும் மகளுமாக நாம இருக்கக் கூடாது..? தயவு கூர்ந்து யோசியங்கள்!
▪ நிஜம் : ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது துணைவியருள் ஒருவரின் இல்லத்தில் தங்கி இருந்தார்கள்.
நபியவர்களுடைய மற்றொரு துணைவி ஒருவர், ஆசையுடன் உணவுப் பண்டம் தயாரித்து, அதை ஒரு தட்டில் வைத்து, நபியவர்களுக்காக தமது பணியாளர் ஒருவரிடம் கொடுத்தனுப்பினார்.
அப்போது நபியவர்கள், எவருடைய வீட்டில் தங்கி யிருந்தார்களோ அந்தத் துணைவி, ரோஷத்தில் அந்தப் பணியாளரின் கையில் இருந்த தட்டை, வேகமாகத் தட்டிவிட்டார். அது கீழே விழுந்து உடைந்துவிட்டது.
உடனே ஆத்திரப்படாமல் நபியவர்கள், அந்த உடைந்த தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்
கள். பிறகு, தட்டிலிருந்த உணவை, மீண்டும் அதி லேயே எடுத்துப் போட்டார்கள்.
அங்கிருந்த தோழர்களை நோக்கி, 'உங்கள் தாய் சற்று ரோஷப்பட்டுவிட்டார், வேறொன்றும் இல்லை' என்றும் புன்னகையுடன் கூறினார்கள்.
பின்னர், அந்தப் பணியாளரை சற்று நேரம் அங்கே இருக்கச் செய்து, தாம் தங்கியிருந்த வீட்டுக்காரத் துணைவியிடம் மற்றொரு தட்டைக்கொண்டு வரச் சொல்லி, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை மாற்றாகக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். [அனஸ் (ரளி) • புகாரி - 5225]
🍄 படிப்பினை என்ன? நீங்களே கூறுங்களேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக